.

Pages

Friday, May 19, 2017

மாநில அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டிக்கு அதிரை அணி தகுதி !

அதிராம்பட்டினம், மே 19
பட்டுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) அணி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கிரிக்கெட் கிளப் 2 ஆம் ஆண்டு நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மே.9 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உட்பட 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.

இன்று வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை கிரிக்கெட் கிளப், அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள் மோதியது. போட்டி முடிவில், அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது. நாளை சனிக்கிழமை மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியோடு மோத உள்ளது. இதில் வெற்றி பெரும் அணிக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட உள்ளது.

4 comments:

  1. பட்டுக்கோட்டையில் நடக்கும் போட்டிகள் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் இல்லை மாவட்ட அளவிலான தொடர் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. Bhai karaikudi,trichy,chennai ethu yellam oru maavattama?

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Appo chennai mattum thaan maanilama. Maanila alavilana pottina tamilaha alavil nadakkum potti. Pala maanilankal kalanthu kondal athu national level potti.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.