அதிரை நியூஸ்: நவ.14
பஞ்சாபி இளைஞர் வயிற்றிலிருந்து 2 பவுண்ட் எடையில் இரும்பு, மரத்துண்டுகள் அகற்றம்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது இளைஞர் அர்ஜூன் ஷா. இவரது வயிற்றிலிருந்து சுமார் 2 பவுண்ட் எடையுள்ள இரும்பு, மரத்துண்டுகள், ரப்பர் போன்ற பொருட்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர் பதிண்டா நகர டாக்டர்கள். (1 பவுண்டு சுமார் 453.50 கிராம்)
சிறுவயதிலேயே கண்டதையும் பொறுக்கித் தின்னும் குணமுடைய அர்ஜூன் ஷாவை பெற்றோர்கள் கண்டித்ததை தொடர்ந்து அவர்கள் முன் சாப்பிடுவதை தவிர்த்த அவர் திருந்திவிட்டதாகவே நினைத்துள்ளனர் ஆனால் பிறருக்கு தெரியாமல் இதுபோன்ற பொருட்களை விழுங்கி வந்துள்ளார்.
சுமார் 1 ½ ஆண்டுகளுக்கு முன்பே அர்ஜூன் வயிற்றுவலியால் துடித்துள்ளார் எனினும் டாக்டர்கள் இது சாதாரண வயிற்றுவலியாகவே இருக்கும் என வைத்தியம் பார்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வயிற்றுவலி அதிகரித்ததுடன் உணவும் நீரும் அறுந்த முடியாமல் மூர்ச்சையாகியுள்ளார்.
டாக்டர்கள் என்டோஸ்கோபி செய்து பார்த்ததன் மூலம் வயிற்றுக்குள் உண்ணக்கூடாத பல்வேறு அந்நிய பொருட்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
இருமுறை ஆபரேசன் செய்யப்பட்டு தற்போது வயிற்றுக்குள் செம்மிப்போயிருந்த பழைய இரும்பு, ரப்பர், மரத்துண்டுகள் ஆகியவற்றை அகற்றியுள்ளனர். மேலும் குடலின் பல்வேறு பகுதியிலும் சிக்கியுள்ள பொருட்களை நீக்குவதற்காக இன்னும் சில ஆபரேசன்கள் செய்யப்படவுள்ளன.
ஆபரேசன் முடிந்து வீட்டிற்கு சென்றபின் தகுந்த மனநல ஆலோசகரிடம் ஆலோசணை பெற்று இத்தீய பழக்கத்திலிருந்து உங்கள் மகன் விடுபட முயற்சி செய்யுங்கள் என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு புத்திமதி சொல்லியுள்ளனர்.
இந்த புத்திமதி ஒரு அர்ஜூனின் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல தங்களுடைய குழந்தைகள் விஷயத்தில் பொடுபோக்காக இருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் தான்.
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
பஞ்சாபி இளைஞர் வயிற்றிலிருந்து 2 பவுண்ட் எடையில் இரும்பு, மரத்துண்டுகள் அகற்றம்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது இளைஞர் அர்ஜூன் ஷா. இவரது வயிற்றிலிருந்து சுமார் 2 பவுண்ட் எடையுள்ள இரும்பு, மரத்துண்டுகள், ரப்பர் போன்ற பொருட்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர் பதிண்டா நகர டாக்டர்கள். (1 பவுண்டு சுமார் 453.50 கிராம்)
சிறுவயதிலேயே கண்டதையும் பொறுக்கித் தின்னும் குணமுடைய அர்ஜூன் ஷாவை பெற்றோர்கள் கண்டித்ததை தொடர்ந்து அவர்கள் முன் சாப்பிடுவதை தவிர்த்த அவர் திருந்திவிட்டதாகவே நினைத்துள்ளனர் ஆனால் பிறருக்கு தெரியாமல் இதுபோன்ற பொருட்களை விழுங்கி வந்துள்ளார்.
சுமார் 1 ½ ஆண்டுகளுக்கு முன்பே அர்ஜூன் வயிற்றுவலியால் துடித்துள்ளார் எனினும் டாக்டர்கள் இது சாதாரண வயிற்றுவலியாகவே இருக்கும் என வைத்தியம் பார்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வயிற்றுவலி அதிகரித்ததுடன் உணவும் நீரும் அறுந்த முடியாமல் மூர்ச்சையாகியுள்ளார்.
டாக்டர்கள் என்டோஸ்கோபி செய்து பார்த்ததன் மூலம் வயிற்றுக்குள் உண்ணக்கூடாத பல்வேறு அந்நிய பொருட்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
இருமுறை ஆபரேசன் செய்யப்பட்டு தற்போது வயிற்றுக்குள் செம்மிப்போயிருந்த பழைய இரும்பு, ரப்பர், மரத்துண்டுகள் ஆகியவற்றை அகற்றியுள்ளனர். மேலும் குடலின் பல்வேறு பகுதியிலும் சிக்கியுள்ள பொருட்களை நீக்குவதற்காக இன்னும் சில ஆபரேசன்கள் செய்யப்படவுள்ளன.
ஆபரேசன் முடிந்து வீட்டிற்கு சென்றபின் தகுந்த மனநல ஆலோசகரிடம் ஆலோசணை பெற்று இத்தீய பழக்கத்திலிருந்து உங்கள் மகன் விடுபட முயற்சி செய்யுங்கள் என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு புத்திமதி சொல்லியுள்ளனர்.
இந்த புத்திமதி ஒரு அர்ஜூனின் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல தங்களுடைய குழந்தைகள் விஷயத்தில் பொடுபோக்காக இருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் தான்.
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.