.

Pages

Monday, November 13, 2017

M.M.S பஷீர் அகமது மறைவு ~ எஸ்.எஸ் பழனி மாணிக்கம் நேரில் இரங்கல் தெரிவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.13
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த M.M.S பஷீர் அகமது (60). இவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.

இவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியம்  ஆகியோர் இன்று திங்கட்கிழமை மறைந்த M.M.S பஷீர் அகமது இல்லத்திற்கு நேரில் வருகை தந்து, அவரது மூத்த மருமகன் எம்.எம்.எஸ் சம்சுதீன் மற்றும் எம்.எம்.எஸ் குடும்பத்தாரிடம் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.