.

Pages

Tuesday, November 14, 2017

30 வயதுக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது அவசியம் ~ சர்க்கரை நோய் கருத்தரங்கில் தகவல்

பேராவூரணி, நவ.14
பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி நவ 14 செவ்வாய்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ஜஸ்டின் பிரசாந்த் தலைமை வகித்தார். டாக்டர்கள் செல்வி, பிரசன்னா முன்னிலை வகித்தனர்.

தேசிய சுகாதார குழுமத்தின் தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலரும், சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு நிபுணருமான டாக்டர் எம்.எட்வின்  கலந்து கொண்டு பேசுகையில்;
"30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் தவறாமல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி சர்க்கரை நோய், இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
தரமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

எனவே அலட்சியம் காட்டாமல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு, பாதங்கள் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நோயாளிகள் தங்களை பாதுகாத்திட இயலும். உடற் பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவர் ஆலோசனையின்படி மாத்திரை, இன்சுலின் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயை கட்டுக்குள் வைத்து இயல்பாக வாழலாம்" என்றார்.

கருத்தரங்கில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  மருத்துவ பரிசோதனை செய்து, தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தொற்றாநோய் பிரிவு செவிலியர்கள் சத்யா, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்ந்து செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல், அழகியநாயகிபுரம், ஊமத்தநாடு, பெருமகளூர் ஆகிய இடங்களில் தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எட்வின் ஆய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.