.

Pages

Wednesday, November 1, 2017

மதுக்கூர் மைதீன் படுகொலை ~ 5 பேர் மீது வழக்கு பதிவு !

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் திங்கள்கிழமை இரவு அரிவாளால் வெட்டப்பட்ட மதுக்கூர் மைதீன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுக்கூர் ராமாம்பாள்புரத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் மகன் மைதீன் என்கிற மதுக்கூர் மைதீன் (37). இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், இவர் திங்கள்கிழமை இரவு மதுக்கூர் சிவக்கொல்லைப் பகுதியிலுள்ள இரு சக்கர வாகன பழுது பார்ப்பு நிலையத்தில் அமர்ந்து அங்கிருந்த மெக்கானிக்குடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர், மதுக்கூர் மைதீனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினராம். இதில் பலத்த காயமடைந்த மதுக்கூர் மைதீன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து மதுக்கூர் மைதீன் கொலையில் தொடர்புடையதாகக் கூறி மதுக்கூர் பெரியார் நகரைச் சேர்ந்த எம்.ரியாவுதீன் (19), எம்.சேக் அப்துல்லா (20), ப.சதாம் உசேன் (28), மதுக்கூர் சூரியத்தோட்டத்தைச் சேர்ந்த ஏ.பெரிஸ் அகமது (21) உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யபப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.