.

Pages

Wednesday, November 1, 2017

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் நவீன தொழில்நுட்ப சேவை அறிமுகம் !

அதிரை நியூஸ்: நவ.01
உலக பிரசித்தி பெற்ற விமான நிலையங்களில் ஒன்றான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் (Singapore Changi Airport) டெர்மினல் 4ல் புதிய தொழிற்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன தொழிற்நுட்ப வசதிகள்  (fully automated check-in system  including facial scanning and computerised baggage drop points) சுமார் 985 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (723 அமெரிக்க டாலர்கள்) செலவில் அமைக்கப்பட்டுள்ளன.வருடத்திற்கு சுமார் 16 மில்லியன் பயணிகளை கையாளுகின்றது இந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.

இப்புதிய தொழிற்நுட்பத்தின் அடிப்படையில் பயணிகள் அனைவரும் விமான நிலைய ஊழியர்கள் யாருடைய உதவியின்றியும் தாமே முக ஸ்கேனிங் செய்து கொண்டு செக்கின் சோதனைகள் (Check-In) , பேக்கேஜ் டிராப் போன்றவைகளை சுயமாக முடித்துக் கொண்டு விமானத்தில் பறக்கலாம்.

இந்த நவீன தொழிற்நுட்பம் அறிமுகமான முதல் நாளின் முதல் சேவையாக சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் விமானப் பயணிகள் இந்த சுய முக ஸ்கேனிங் மெஷின்களை உபயோகப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர் எனினும் அவர்களில் சிலரால் சுய ஸ்கேனிங் செய்து கொள்ள இயலாததால் நடைமுறையிலுள்ள கவுண்டர்களுக்குச் சென்று வழமையான பணிகளை முடித்துக் கொண்டனர்.

இதுபோன்ற நவீன தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் ஆசிய அளவில் ஹாங்காங், துபை போன்ற நாடுகளுடனும், அண்டை நாடுகளான மலேஷியா, தாய்லாந்து போன்றவற்றுடனும் சிங்கப்பூர் பயணிகளை கவரும் பெரும் போட்டியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.