தஞ்சாவூர் புகை வண்டி நிலையத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (1.11.2017) நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் புகை வண்டி நிலையம் உணவகம், தேநீர் கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும், புகைவண்டி வழிதடத்தின் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குப்பைகள் மற்றும் மழை நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். புகை வண்டி பயணிகள் பயணத்தின் போது பயன்படுத்தி தூக்கி எறிந்த டீ கப்புகள், உணவு பாக்கெட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால், அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நிலைய மேலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சரக்கு இறங்கு தளத்தில் ஆய்வு மேற்கொண்டு சுமை தூக்குவோருக்கான தங்குமிடத்தையும், அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியினையும் ஆய்வு செய்தார். புகை வண்டி நிலையத்தில் மழை நீர்; கால்வாய்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் சுத்தம் செய்திடவும், புகைவண்டி நிலையத்திற்கு பயன்பாட்டிற்காக நீர் சேகரிக்கப்படும் பெரிய நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதை மாற்றி கொசுக்கள் உட்புகா வண்ணம் சிமெண்ட் ஸ்லாப் அமைக்கவும், தொட்டியினை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கவும், புகைவண்டி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
பின்னர், தலைமை தபால் நிலையத்தில் எதிரில் உள்ள கடைகளிலும், முன்னாள் படைவீரர் அலுவலகத்திலும் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, உதவி நிலைய மேலாளர் ராஜசேகர், முன்னாள் படை வீரர் உதவி இயக்குநர் சீனிவாசன், நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் புகை வண்டி நிலையம் உணவகம், தேநீர் கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும், புகைவண்டி வழிதடத்தின் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குப்பைகள் மற்றும் மழை நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். புகை வண்டி பயணிகள் பயணத்தின் போது பயன்படுத்தி தூக்கி எறிந்த டீ கப்புகள், உணவு பாக்கெட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால், அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நிலைய மேலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சரக்கு இறங்கு தளத்தில் ஆய்வு மேற்கொண்டு சுமை தூக்குவோருக்கான தங்குமிடத்தையும், அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியினையும் ஆய்வு செய்தார். புகை வண்டி நிலையத்தில் மழை நீர்; கால்வாய்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் சுத்தம் செய்திடவும், புகைவண்டி நிலையத்திற்கு பயன்பாட்டிற்காக நீர் சேகரிக்கப்படும் பெரிய நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதை மாற்றி கொசுக்கள் உட்புகா வண்ணம் சிமெண்ட் ஸ்லாப் அமைக்கவும், தொட்டியினை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கவும், புகைவண்டி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
பின்னர், தலைமை தபால் நிலையத்தில் எதிரில் உள்ள கடைகளிலும், முன்னாள் படைவீரர் அலுவலகத்திலும் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, உதவி நிலைய மேலாளர் ராஜசேகர், முன்னாள் படை வீரர் உதவி இயக்குநர் சீனிவாசன், நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.