அதிரை நியூஸ்: நவ.15
ஓமன் நாட்டுச் சட்டப்படி ஒமானியர்களுக்கு மட்டுமே மீன்பிடி லைசென்ஸ் வழங்கப்படும் என்றாலும் அவர்களின் கீழ் பல்லாயிரம் வெளிநாட்டினர் பனியாற்றி வருகின்றனர். மேலும் பல வெளிநாட்டினரும் எத்தகைய லைசென்ஸூம் இன்றியே சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய அனுமதியற்ற மீனவர்களை தடுக்கவும், கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் gill net (spinning/encircling) & drift-nets மற்றும் மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றவும் அவ்வப்போது விவசாயம் மற்றும் கடல்சார் அமைச்சகத்துடன் ராயல் ஓமன் போலீஸார் இணைந்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் துகும், மஸீரா, மஹூத், ஜலான் மற்றும் பல இடங்களில் சுமார் 100 மீன்பிடி படகுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 200 தடை செய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 600 வெளிநாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடிபடும் சட்டவிரோத மீனவர்கள் மீண்டும் ஒமன் கடலில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவே மாட்டார்கள். மேலும் 3 மாத சிறையுடன் பெருந்தொகை ஒன்றையும் அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அல் உஸ்தா கவர்னரேட் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சட்டவிரோத மீனவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பயன்படுத்துபவர்களை ஒரு தொலைக்காட்சி குழு படமெடுத்ததை கண்டு ஆத்திரமடைந்த மீனவர்கள் அவர்களை தாக்க முயற்சித்ததை தொடர்ந்து தொலைக்காட்சிக் குழு உயிருக்கு பயந்து ஓட்டமெடுத்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஓமன் நாட்டுச் சட்டப்படி ஒமானியர்களுக்கு மட்டுமே மீன்பிடி லைசென்ஸ் வழங்கப்படும் என்றாலும் அவர்களின் கீழ் பல்லாயிரம் வெளிநாட்டினர் பனியாற்றி வருகின்றனர். மேலும் பல வெளிநாட்டினரும் எத்தகைய லைசென்ஸூம் இன்றியே சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய அனுமதியற்ற மீனவர்களை தடுக்கவும், கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் gill net (spinning/encircling) & drift-nets மற்றும் மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றவும் அவ்வப்போது விவசாயம் மற்றும் கடல்சார் அமைச்சகத்துடன் ராயல் ஓமன் போலீஸார் இணைந்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் துகும், மஸீரா, மஹூத், ஜலான் மற்றும் பல இடங்களில் சுமார் 100 மீன்பிடி படகுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 200 தடை செய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 600 வெளிநாட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடிபடும் சட்டவிரோத மீனவர்கள் மீண்டும் ஒமன் கடலில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவே மாட்டார்கள். மேலும் 3 மாத சிறையுடன் பெருந்தொகை ஒன்றையும் அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அல் உஸ்தா கவர்னரேட் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சட்டவிரோத மீனவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பயன்படுத்துபவர்களை ஒரு தொலைக்காட்சி குழு படமெடுத்ததை கண்டு ஆத்திரமடைந்த மீனவர்கள் அவர்களை தாக்க முயற்சித்ததை தொடர்ந்து தொலைக்காட்சிக் குழு உயிருக்கு பயந்து ஓட்டமெடுத்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.