அதிரை நியூஸ்: நவ.14
அமீரகத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டு, 8 ஆண்டுகளாக நாடு திரும்ப முடியாமல் தவித்த இந்தியர் ஒருவர் எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கியின் உதவியால் நாடு திரும்பினார்.
சங்கர நாராயணன் (வயது 61), கேரளத்தை சேர்ந்த இவர் ஷார்ஜாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் மின் இயக்க பராமரிப்பு துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
2009 ஆம் ஆண்டு அவருடைய முதலாளிக்கு சொந்தமான இன்னொரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பங்களதேஷ் தொழிலாளி ஒருவர் தங்குமிட கழிவறையில் ஏற்பட்ட மின்கசிவு விபத்தில் உயிரிழந்தார். சங்கர நாராயணனுக்கும் இறந்த பங்களாதேஷ் நாட்டவருக்கும் எத்தகைய நேரடி வேலைத்தொடர்பும் இருந்ததில்லை.
விபத்தை தொடர்ந்து சங்கரநாராயணின் முதலாளியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது எனினும் சங்கரநாராயணனை முதலாளி வேண்டிக் கொண்டதால் தன்னுடைய பாஸ்போர்ட்டை முதலாளியின் பாஸ்போர்ட்டிற்கு ஈடாக நீதிமன்றத்தில் நல்லெண்ண, மனிதாபிமான உதவி அடிப்படையில் ஒப்படைத்தார்.
முதலாளியும் இறந்த பங்களாதேஷ் நட்டவருக்காக கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 'தியா' (Diya) எனப்படும் இரத்த ஈட்டுப் பணம் (Blood Money) 2 லட்சம் திர்ஹத்தை கட்டி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுத்தர சம்மதித்திருந்தார் எனினும் 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்ற இடத்தில் மாரடைப்பால் காலமானார்.
கம்பெனி முதலாளியின் மகனுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்தது, அவர் தனது தந்தை செலுத்த வேண்டிய இரத்த ஈட்டுப்பணத்தை செலுத்த மறுத்து விட்டார் என்றாலும் சங்கரநாராயணன் கடந்த வருடம் 60 வயது பூர்த்தியடையும் வரை தனது நிறுவனத்தில் வேலைபார்க்க அனுமதியளித்திருந்தார்.
இன்னொருபுறம் வழக்கு, அப்பீல் என நீண்ட போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இறுதியாக, சங்கரநாராயணன் இரத்த ஈட்டுப் பணத்தை செலுத்தியாக வேண்டும் என தீர்ப்பே இறுதியானது.
2 லட்சம் திர்ஹத்தை செலுத்த முடியாததால் நாட்டிற்கு திரும்ப முடியாமலும், விசாவை புதுப்பிக்க இயலாமலும் தவித்தவர் பற்றி கல்ஃப் நியூஸ் நாளிதழில் சிறப்புக் கட்டூரை பிரசுரமானதை தொடர்ந்து 2 லட்சம் திர்ஹத்தை முழுமையாக செலுத்தி சங்கரநாராயணனனை விடுவித்தது 'எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி'
மேலும் ஒரு இடியாக, இரத்தப் பணப் பிரச்சனைக்கு மேல் ரெஸிடென்ஸ் விசா இன்றி அமீரகத்தில் தங்கியதற்கான அபராதமும் மலைபோல் வளர்ந்து நின்றது. தொடர் கோரிக்கைகள் மூலம் கடைசியாக 4,500 திர்ஹம் கட்ட சிறப்பு ஒப்புதல் பெற்று கட்டியதை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தார். தான் நாடு திரும்ப உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு சென்றார் சங்கடத்தில் சிக்கிய சங்கரநாராயணன்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டு, 8 ஆண்டுகளாக நாடு திரும்ப முடியாமல் தவித்த இந்தியர் ஒருவர் எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கியின் உதவியால் நாடு திரும்பினார்.
சங்கர நாராயணன் (வயது 61), கேரளத்தை சேர்ந்த இவர் ஷார்ஜாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் மின் இயக்க பராமரிப்பு துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
2009 ஆம் ஆண்டு அவருடைய முதலாளிக்கு சொந்தமான இன்னொரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பங்களதேஷ் தொழிலாளி ஒருவர் தங்குமிட கழிவறையில் ஏற்பட்ட மின்கசிவு விபத்தில் உயிரிழந்தார். சங்கர நாராயணனுக்கும் இறந்த பங்களாதேஷ் நாட்டவருக்கும் எத்தகைய நேரடி வேலைத்தொடர்பும் இருந்ததில்லை.
விபத்தை தொடர்ந்து சங்கரநாராயணின் முதலாளியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது எனினும் சங்கரநாராயணனை முதலாளி வேண்டிக் கொண்டதால் தன்னுடைய பாஸ்போர்ட்டை முதலாளியின் பாஸ்போர்ட்டிற்கு ஈடாக நீதிமன்றத்தில் நல்லெண்ண, மனிதாபிமான உதவி அடிப்படையில் ஒப்படைத்தார்.
முதலாளியும் இறந்த பங்களாதேஷ் நட்டவருக்காக கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 'தியா' (Diya) எனப்படும் இரத்த ஈட்டுப் பணம் (Blood Money) 2 லட்சம் திர்ஹத்தை கட்டி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுத்தர சம்மதித்திருந்தார் எனினும் 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்ற இடத்தில் மாரடைப்பால் காலமானார்.
கம்பெனி முதலாளியின் மகனுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்தது, அவர் தனது தந்தை செலுத்த வேண்டிய இரத்த ஈட்டுப்பணத்தை செலுத்த மறுத்து விட்டார் என்றாலும் சங்கரநாராயணன் கடந்த வருடம் 60 வயது பூர்த்தியடையும் வரை தனது நிறுவனத்தில் வேலைபார்க்க அனுமதியளித்திருந்தார்.
இன்னொருபுறம் வழக்கு, அப்பீல் என நீண்ட போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இறுதியாக, சங்கரநாராயணன் இரத்த ஈட்டுப் பணத்தை செலுத்தியாக வேண்டும் என தீர்ப்பே இறுதியானது.
2 லட்சம் திர்ஹத்தை செலுத்த முடியாததால் நாட்டிற்கு திரும்ப முடியாமலும், விசாவை புதுப்பிக்க இயலாமலும் தவித்தவர் பற்றி கல்ஃப் நியூஸ் நாளிதழில் சிறப்புக் கட்டூரை பிரசுரமானதை தொடர்ந்து 2 லட்சம் திர்ஹத்தை முழுமையாக செலுத்தி சங்கரநாராயணனனை விடுவித்தது 'எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி'
மேலும் ஒரு இடியாக, இரத்தப் பணப் பிரச்சனைக்கு மேல் ரெஸிடென்ஸ் விசா இன்றி அமீரகத்தில் தங்கியதற்கான அபராதமும் மலைபோல் வளர்ந்து நின்றது. தொடர் கோரிக்கைகள் மூலம் கடைசியாக 4,500 திர்ஹம் கட்ட சிறப்பு ஒப்புதல் பெற்று கட்டியதை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தார். தான் நாடு திரும்ப உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு சென்றார் சங்கடத்தில் சிக்கிய சங்கரநாராயணன்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.