.

Pages

Wednesday, November 15, 2017

அமீரக மஸ்ஜிதுகளில் அனுமதியின்றி செய்யக்கூடாத நல்லறங்கள் குறித்து புதிய வரைவுச் சட்டம் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: நவ.15
அமீரகத்தின் அனைத்து மஸ்ஜிதுகளிலும் என்னென்ன நல்லறங்களை அரசின் முன் அனுமதியின்றி செய்யக்கூடாது என்பது குறித்து புதிய வரைவுச்சட்டம் அமீரக ஆட்சியாளர் ஷேக் கலீஃபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின் சட்டத்தை மீறுவோர் 3 மாத சிறைவாசத்துடன் 20,000 திர்ஹத்திற்கு குறையாத அபராதமும் விதிக்கப்படுமாம்.

புதிய வரைவுச்சட்டத்தின்படி அமீரக மஸ்ஜிதுகளில் செய்யக்கூடாத நல்லறங்கள் வருமாறு: 
மார்க்க விளக்க அமர்வுகள், சொற்பொழிவுகள், குர்ஆன் மனன வகுப்புக்கள், ஆலோசணை கூட்டங்கள், புத்தகங்கள் விநியோகம், நன்கொடை வசூலித்தல் மற்றும் பல... (among other activities) என்பதுடன் அனைத்து வகை அறிவிப்புக்கள், குர்ஆன் வழங்குதல், மரச்சாமான்கள் வழங்குதல் மற்றும் ரமலான் விருந்து போன்ற அறிவிப்புக்களையும் ஒட்டக்கூடாது, பகிரக்கூடாது.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மார்க்க பத்வாக்கள் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 7 எமிரேட்டுகளுக்கும் பொதுவாக நிறுவப்பட்டுள்ள பத்வா கவுன்சிலிடம் மட்டுமே மார்க்கத் தீர்ப்புக்களை கேட்டுப் பெற வேண்டும். சுயமாக யாரும் எந்த விளக்கத்தை தெரிவிக்க, பகிர தடை செய்யப்பட்டுள்ளனர்.

பத்வா கவுன்சிலின் இணைய தளத்தில் இதுவரை 3 மில்லியனுக்கு மேற்பட்ட பத்வா தொகுப்புக்கள் பொது மக்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆணையத்தின் கீழ் செயல்படும் பத்வா கவுன்சில் மாதந்தோறும் பத்வா தொடர்பாக 1,300க்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஏற்பதாகவும் அவற்றில் பெரும்பான்மையானவை வெளிநாடுகளிலிருந்து மார்க்க தீர்ப்பு கேட்பவை என்றும் விளக்கப்பட்டுள்ளது.

பத்வா கவுன்சில் எனும் ஒற்றை சாளரமுறையால், தான் தோன்றித்தனமான பத்வாக்கள், வழிகெடுத்தல், தீவிரவாத ஆதரவு போன்றவை மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.