.

Pages

Wednesday, November 15, 2017

அமெரிக்காவிலும் ஒரு பேரறிவாளன்... 50 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை!

அதிரை நியூஸ்: நவ.15
அமெரிக்கா, லூசியானாவில் 1971 ஆம் ஆண்டு நர்ஸ் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர் வில்பெர்ட் ஜோன்ஸ் என்பவர் தனது 65 வது வயதில் 2,000 டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சுமார் 50 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துவிட்ட வில்பெர்ட் ஜோன்ஸின் அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத்தரப்பு வில்பெர்ட் ஜோன்ஸிற்கு எதிரான சாட்சியங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தார். இதைச் சொல்ல நீதிமன்றத்திற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு நிகழ்ந்ததும் கிட்டதட்ட இதேபோல் தான். அவருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையை தயாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி திரு. தியாகராஜன் அவர்கள் கூட பணி ஓய்வுக்குப் பின் தன் மனசாட்சி உலுக்கியதால், பதின்மப் பருவத்தில் இருந்த பேரறிவாளன் அறியாமல் செய்த தவறை அறிந்தே செய்ததாக எழுதினேன் என ஒப்புதல் தெரிவித்த பின்னரும் கொட்டடியில் முழுவாழ்வையும் தொலைத்து விட்டார் என்பதை பார்க்கின்றோம். பேரறிவாளன் மட்டுமல்ல பல அப்பாவி கோவை மற்றும் கோத்ரா சிறைவாசிகளின் கதையும் இதுதான்.

http://tamil.thehindu.com/india/article20443588.ece?homepage=true

Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.