அதிரை நியூஸ்: மார்ச் 19
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு துபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை அறிவிப்பு.
சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Happiness Day) எதிர்வரும் மார்ச் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அமீரகம் வளைகுடா அரபுநாடுகளிலேயே மகிழ்ச்சியுடன் வாழும் அதிக மக்களைக் கொண்டுள்ள முதன்மை நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் அறிந்திருப்பீர்கள்.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை ஒட்டி துபை போக்குவரத்துத் துறை (RTA) பல்வேறு சர்ப்ரைஸ் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி துபை விமான நிலையங்களில் வந்திறங்கும் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச டேக்ஸி பயணங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் மெட்ரோ, பஸ், டேக்ஸி மற்றும் படகு பயணிகள், வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு (Customer Happinss Centers) வருகை தரும் வாடிக்கையாளர்கள், RTA ஓட்டுனர்கள், RTA ஊழியர்கள், RTA டிக்கெட் பரிசோதகர்கள் போன்றோர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகளாக அன்பளிப்புகளும், சிலருக்கு இலவச நோல் கார்டுகளும், சிலருக்கு துபையின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான குளோபல் வில்லேஜ், லா மெர், துபை பார்க்ஸ் அண்ட் ரிசோர்ட் போன்ற பகுதிகளுக்கு பிரத்தியேக ஹேப்பினஸ் பஸ்களில் இலவச பஸ் டூர்களும் அழைத்துச் செல்லப்படுவர்.
வெளிப்புற சுற்றுலாக்களாக அல் ஹத்தா அணைக்கட்டு பகுதிகளில் துடுப்பு படகு சவாரிக்கும் அழைத்துச் செல்லப்படுவர் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சில பல பேருந்துகள், டேக்ஸிக்களும் மகிழ்ச்சி தினத்தை வெளிப்படுத்தும் சின்னங்களுடன் துபையில் வலம் வரும்.
இன்னொரு புறம் சிரியா, ரோஹிங்கியா, பாலஸ்தீன் போன்று பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச மக்களுக்கும் ஒருவேளை உணவோ அல்லது ஒரு நாளாவது நிம்மதியான உறக்கமோ கிடைத்தால் அத்தகைய மகிழ்ச்சிக்கு ஈடாக எதாவது அமையுமா? முன்பொருமுறை ஆப்கானின் பாமியன் புத்தர் சிலையை புதுப்பிக்க பல்லாயிரம் கோடியை செலவிட வந்தவர்கள் அச்சிலைக்கு அருகே பசியும் பட்டினியுமாக இருந்த மக்களுக்கு ஒருகவள சாப்பாட்டை வழங்க மறுத்ததும் வரலாறு.
கண்ணை கட்டிக்கொண்ட உலகம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு துபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை அறிவிப்பு.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை ஒட்டி துபை போக்குவரத்துத் துறை (RTA) பல்வேறு சர்ப்ரைஸ் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி துபை விமான நிலையங்களில் வந்திறங்கும் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச டேக்ஸி பயணங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் மெட்ரோ, பஸ், டேக்ஸி மற்றும் படகு பயணிகள், வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு (Customer Happinss Centers) வருகை தரும் வாடிக்கையாளர்கள், RTA ஓட்டுனர்கள், RTA ஊழியர்கள், RTA டிக்கெட் பரிசோதகர்கள் போன்றோர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகளாக அன்பளிப்புகளும், சிலருக்கு இலவச நோல் கார்டுகளும், சிலருக்கு துபையின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான குளோபல் வில்லேஜ், லா மெர், துபை பார்க்ஸ் அண்ட் ரிசோர்ட் போன்ற பகுதிகளுக்கு பிரத்தியேக ஹேப்பினஸ் பஸ்களில் இலவச பஸ் டூர்களும் அழைத்துச் செல்லப்படுவர்.
வெளிப்புற சுற்றுலாக்களாக அல் ஹத்தா அணைக்கட்டு பகுதிகளில் துடுப்பு படகு சவாரிக்கும் அழைத்துச் செல்லப்படுவர் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சில பல பேருந்துகள், டேக்ஸிக்களும் மகிழ்ச்சி தினத்தை வெளிப்படுத்தும் சின்னங்களுடன் துபையில் வலம் வரும்.
இன்னொரு புறம் சிரியா, ரோஹிங்கியா, பாலஸ்தீன் போன்று பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச மக்களுக்கும் ஒருவேளை உணவோ அல்லது ஒரு நாளாவது நிம்மதியான உறக்கமோ கிடைத்தால் அத்தகைய மகிழ்ச்சிக்கு ஈடாக எதாவது அமையுமா? முன்பொருமுறை ஆப்கானின் பாமியன் புத்தர் சிலையை புதுப்பிக்க பல்லாயிரம் கோடியை செலவிட வந்தவர்கள் அச்சிலைக்கு அருகே பசியும் பட்டினியுமாக இருந்த மக்களுக்கு ஒருகவள சாப்பாட்டை வழங்க மறுத்ததும் வரலாறு.
கண்ணை கட்டிக்கொண்ட உலகம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.