தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி முதல்வர் என்.உதயகுமார் யோகா பயிற்சியை வழங்கினார். இதில், 4 ஆம் வகுப்பு முதல், 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் 320 பேர் கலந்துகொண்டு பத்மாசனம், வஜ்ராசனம், சூரிய நமாஸ்காரம், உட்கட் ஆசனம், விருட்சாசனம், திரிகோணாசனம், சர்வங்காசனம், ஹலாசனம், பவன முத்தாசனம் உள்ளிட்ட 20 வகையான ஆசனப் பயிற்சியை செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ். சந்திரசேகர், எஸ். பி.கணபதி, என். சேகர், நர்சரி பள்ளித்தாளாளர்கள் ராமலிங்கம், பெரியண்ணன், கிரிராஜன், நவநீதம், அடைக்கலம் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். முடிவில் பள்ளி முதுகலை ஆசிரியர் போஸ் ராஜா நன்றி கூறினார்.
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDelete