தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் தேர்தல் பணி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று (15.03.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை 321 சங்கங்களுக்கும், பால்வளத்துறை 118 சங்கங்களுக்கும், மீன் வளத்துறை 41 சங்கங்களுக்கும், கைத்தறி மற்றும்துணி நூல் துறை 16 சங்கங்களுக்கும், வீட்டு வசதி துறை 22 சங்கங்களுக்கும், மாவட்ட தொழில் மையம் 14 சங்கங்களுக்கும், சமூக நலத்துறை 3 சங்கங்களுக்கும், கதர் கிராம தொழில் துறை 26 சங்கங்களுக்கும், ஆக மொத்தம் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையில் 114 சங்கங்களுக்கும், கும்பகோணத்தில் 83 சங்கங்களுக்கும், பட்டுக்கோட்டையில் 124 சங்கங்களுக்கும், ஆக மொத்தம் 321 சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில கூட்டுறவு சங்கம் மூலம் தேர்தல் விதிமுறை குறித்த கையேடு வழங்கப்படும். அனைவரும் இந்த கையேட்டில் உள்ள தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதன்படி வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வேட்பு மனு பெறுதல், கூட்டுறவு சங்கத்திற்கு போட்டி இருந்தால் வாக்குப்பதிவு நடத்தி முடிவுகள் அறிவிக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மொ.ஏகாம்பரம், மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் உதவி ஆணையர் எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை 321 சங்கங்களுக்கும், பால்வளத்துறை 118 சங்கங்களுக்கும், மீன் வளத்துறை 41 சங்கங்களுக்கும், கைத்தறி மற்றும்துணி நூல் துறை 16 சங்கங்களுக்கும், வீட்டு வசதி துறை 22 சங்கங்களுக்கும், மாவட்ட தொழில் மையம் 14 சங்கங்களுக்கும், சமூக நலத்துறை 3 சங்கங்களுக்கும், கதர் கிராம தொழில் துறை 26 சங்கங்களுக்கும், ஆக மொத்தம் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையில் 114 சங்கங்களுக்கும், கும்பகோணத்தில் 83 சங்கங்களுக்கும், பட்டுக்கோட்டையில் 124 சங்கங்களுக்கும், ஆக மொத்தம் 321 சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில கூட்டுறவு சங்கம் மூலம் தேர்தல் விதிமுறை குறித்த கையேடு வழங்கப்படும். அனைவரும் இந்த கையேட்டில் உள்ள தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதன்படி வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வேட்பு மனு பெறுதல், கூட்டுறவு சங்கத்திற்கு போட்டி இருந்தால் வாக்குப்பதிவு நடத்தி முடிவுகள் அறிவிக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மொ.ஏகாம்பரம், மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் உதவி ஆணையர் எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.