.

Pages

Saturday, March 31, 2018

திருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15 வது திருக்குர்ஆன் மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை மாலை அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, திருக்குர்ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் தலைமை வகித்தார். அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தொடக்க உரை ஆற்றினார்.

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15 வது திருக்குர் ஆன் மாநாடு, புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில், கலந்துகொண்ட அதிராம்பட்டினம் மஹல்லா சங்கங்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளிடம், திருக்குர்ஆன் மாநாட்டிற்கு ஒத்துழைப்பு, திருக்குர் ஆன் மாநாட்டில் ஒவ்வொரு மஹல்லாவை சேர்ந்த பெண்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ள செய்வது, திருக்குர் ஆன் மாநாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்த மாணவர்களும் அதிகமாக கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வது உள்ளிட்டவை வேண்டுகோளாக வைக்கப்பட்டன.

கூட்டத்தில், சம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம், கடற்கரைத்தெரு, தரகர் தெரு, கீழத்தெரு, புதுத்தெரு, நெசவுத்தெரு, ஆதம் நகர் உட்பட அதிராம்பட்டினம் மஹல்லா சங்கங்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.