.

Pages

Friday, March 16, 2018

அதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழு ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, அதிராம்பட்டினம், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் நடைபெற உள்ள 15 வது திருக்குர் ஆன் மாநாட்டில், ஆண்டு சிறப்பு மலர் வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்பணிக்காக 10 பேர் கொண்ட மலர்க்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் 2 வது ஆலோசனைக்கூட்டம் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், வெள்ளிவிழா ஆண்டு மலரில் இடம்பெறும் கட்டுரைகள், அதிரை பைத்துல்மால் சேவைத் திட்டங்கள், விளம்பரதாரர்களிடம் விளம்பரங்கள் பெறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. அடுத்தக்கூட்டம் வரும் மார்ச் 19 ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் வெள்ளிவிழா மலர்க்குழுவினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.