தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழப் பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.அன்புச்செல்வன் (60). கடந்த மார்ச் 4 ஆம் தேதி தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அன்புச்செல்வனை அங்குள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த ஏராளமான மலைத்தேனீக்கள் கூட்டமாக வந்து கொட்டியுள்ளன. இதனால், தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து, அன்புச்செல்வனின் மனைவி அமுதா (55) அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.