.

Pages

Thursday, March 15, 2018

அதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு !

அதிராம்பட்டினம், மார்ச் 15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத் தேவர் மனைவி வீரமணி அம்மாள் (62). இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டுக்கு அருகிலுள்ள தன்னுடைய தங்கை வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த சிமென்ட் நிற காரில் 30 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் இருந்துள்ளனர். வீரமணி அம்மாள் அருகே வந்ததும் கார் நிறுத்தப்பட்டதாம். அப்போது காரில் அமர்ந்திருந்த நபர் காரை விட்டு கீழே இறங்கிச் சென்று சாலையில் நடந்து சென்ற வீரமணி அம்மாளை பலமாக தாக்கியுள்ளார்.  இதில் நிலைகுலைந்து வீரமணி அம்மாள் கீழே  விழுந்தவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை அந்த நபர் பறித்துக் கொண்டு தயாராக நின்ற காரில் ஏறி தப்பினராம். தகவலறிந்த போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். புகாரின்பேரில் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.