.

Pages

Saturday, March 31, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவை (முழு விவரம்)

அதிராம்பட்டினம், மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்குகளை ஏற்றிச்செல்ல பிரத்தியோக சரக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையம்:
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியில்,
பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடைகள், மழை நீர் வடிகால், வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை, டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என கட்டப்பட்டு வருகிறது.

ரயில் நிலைய மேற்கூரை:
மற்றொருபுறம், அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரை அமைப்பதற்காக முதல் கட்டமாக 50 டன் இரும்பில் பணிகள் நடந்து முடிந்தது. தற்போது, 2 வது கட்டமாக 90 டன் இரும்பில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடை மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்காக 15 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெல்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டவாளம் அமைக்கும் பணி:
மாளியக்காடு முதல் அதிராம்பட்டினம் பகுதி வரையிலான ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரயில் பாதையில் ஜல்லிகள் கொட்டப்பட்டு அதில் ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவை:
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலகட்டத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து நெல், அரசி, தேங்காய், மீன், கருவாடு மற்றும் உப்பு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மீனவர்கள், வணிகர்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வந்துசெல்ல தனி பிளாட் பாரம் மற்றும் சரக்குகளை இருப்பு வைக்க கிடங்குகள் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சரக்கு வாகனங்கள் வந்து செல்ல பிரத்தியோகமாக ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இருந்து ஏரிப்புறக்கரை செல்லும் சாலையை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை)  பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின், இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த வழித்தடத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அமைந்துள்ள சுற்றுப்புறபகுதிகளில் ரயில்வே துறைக்கு சொந்தமான போதுமான இடவசதி அமையப்பெற்றுள்ளதால், இந்நிலையத்தில், சரக்கு ரயில் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இப்பகுதி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் பெரிதும் பயனடைவர். திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் அறந்தாங்கி, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் சரக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

-- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.