.

Pages

Friday, March 16, 2018

துபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி!

துபாய் : துபாயில் இந்திய தொழிலாளர் வள மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் துபாயின் ஜுமைரா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் பிரச்சனைகள், குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், கிரிடிட் கார்டு உள்ளிட்ட பிரச்சனைகள், ஆதார் அட்டை விளக்கம், வாட் வரி தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் 800 46342 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். இந்த வாய்ப்பை அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.