பேராவூரணி மார்ச்.27-
வருவாய்துறை அலுவலர்களால் அனுமதி இன்றி மணல் கடத்துவதாக பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான டயர் வண்டிகள் வீணாகி வருகிறது.... இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். அன்றாடங்காய்ச்சிகளான மணல் வண்டி தொழிலாளர்கள் முறையான சங்கங்களின் கீழ், அமைப்பு ரீதியாக செயல்படாமல் உள்ளனர். சொந்த தேவைகளுக்காகவும், வீடு கட்டுவோருக்காக மணல் எடுக்க வாடகைக்கும், சில நேரங்களில் விவசாயப் பணிகளுக்கும் செல்வது இவர்களின் வாடிக்கையாகும். பெரும்பாலான நாட்களில் வேலை இல்லாமல், கூலி வேலைக்கும், விவசாய பணிகளுக்கும் செல்வது வழக்கம்.
டயர் வண்டி சுமார் ரூ 30 ஆயிரம் முதல் ரூ 60 ஆயிரம் வரை தயாரிப்பு செலவாகிறது. இந்த வண்டிகளில் பூட்டப்படும் காளைகள் ஒரு ஜோடி சுமார் ரூ 75 ஆயிரம் முதல் 1.5 இலட்சம் வரை ஆகிறது. எனவே ஒரு வண்டி-மாடு ரூ 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை ஆகிறது. மாடுகள் தீவனம் மற்றும் பராமரிப்பு, மருத்துவ செலவுகள் என தினசரி ரூ 250 செலவாகிறது. சொந்த தேவைகளுக்காக இப்பகுதி காட்டாறுகளில் இருந்து மணல் அள்ளப்பட்டு, ஒரு வண்டி ரூ 500 முதல் 800 வரை விற்கப்படுகிறது. கால்நடைகள் மற்றும் வாகன பராமரிப்பு போக வண்டி உரிமையாளருக்கு ரூ 300 வருமானம் கிடைக்கிறது. இதிலும் தொடர்ச்சியாக தினசரி வேலை கிடைப்பதில்லை. மணல் கடத்தல் என வருவாய்துறை அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்துவதால், தொடர்ந்து வேலை கிடைப்பதும் இல்லை.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல தரப்பு புகாரின் பேரில் தாலுகா வருவாய்துறையினர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து, அடிக்கடி சோதனை நடத்தி மணல் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்கின்றனர். இவ்வாறு வண்டிகளை பறிமுதல் செய்யும்போது, வழக்குப்பதிவு செய்து விட்டு, வண்டிகளை வைத்துக்கொண்டு மாடுகளை மட்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வண்டிகள் காவல்நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் என 20 க்கும் மேற்பட்ட சுமார் ரூ 15 இலட்சம் மதிப்புடைய டயர் வண்டிகள் மழையிலும், வெயிலிலும் கிடந்து வீணாகி வருகிறது. தொழில் நடத்த முடியாமல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாடுகளை பராமரிக்கவும் முடியாமல், தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு காணவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கூறுகையில், " லாரிகள், டிப்பர்கள், டிராக்டர்கள், டெம்போக்கள் மூலமாக மணல் கடத்துபவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளாகவும், உள்ளூரில் செல்வாக்கு பெற்ற நபர்களாகவும் உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளால் இவர்களை ஏதும் செய்யமுடிவதில்லை. உறுதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இல்லையெனில் பணி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதுபோன்ற மணல் கொள்ளைகளை தடுக்க முடியவில்லை. மணல் கொள்ளைகளால் குடிநீர் ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படுகிறது.
ஆனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரும்பாலும் உள்ளூர் தேவைகளுக்கு, குவாரி உள்ள இடங்களில் மணல் அள்ளுகின்றனர். இவர்களால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மணல் வண்டி தொழிலாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து மணல் எடுக்க டோக்கன் வழங்க வேண்டும்.
மணல் கொள்ளை, மணல் மோசடி கூடாது. விவசாயம் பாதிக்கும் வகையிலோ, பள்ளம் தோண்டி ஆற்றின் போக்கை மாற்றும் விதமாக மணல் அள்ளாமல், சொந்த தேவைகளுக்கு வரைமுறைக்குட்பட்டு தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கென வரைமுறைகளை உருவாக்கி, மணல் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதனை அரசு கண்காணிக்க வேண்டும். லாரிகளில் வெட்டி அள்ளப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு மணல்
கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்டு வீணாகி வரும் மணல் மாட்டு வண்டிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உரிய வழிவகை காணப்பட வேண்டும். மணல் கொள்ளை என்பது தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரைமுறையோடு தொழிலாளர்கள் மணல் எடுக்க குவாரி அமைத்து டோக்கன் வழங்க வேண்டும்" என்றார்.
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய தீர்வு கண்டு தங்கள் வாழ்வாதாரத்தை காத்திடவேண்டும் என்பதே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கையாகும் ....!!!
வருவாய்துறை அலுவலர்களால் அனுமதி இன்றி மணல் கடத்துவதாக பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான டயர் வண்டிகள் வீணாகி வருகிறது.... இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். அன்றாடங்காய்ச்சிகளான மணல் வண்டி தொழிலாளர்கள் முறையான சங்கங்களின் கீழ், அமைப்பு ரீதியாக செயல்படாமல் உள்ளனர். சொந்த தேவைகளுக்காகவும், வீடு கட்டுவோருக்காக மணல் எடுக்க வாடகைக்கும், சில நேரங்களில் விவசாயப் பணிகளுக்கும் செல்வது இவர்களின் வாடிக்கையாகும். பெரும்பாலான நாட்களில் வேலை இல்லாமல், கூலி வேலைக்கும், விவசாய பணிகளுக்கும் செல்வது வழக்கம்.
டயர் வண்டி சுமார் ரூ 30 ஆயிரம் முதல் ரூ 60 ஆயிரம் வரை தயாரிப்பு செலவாகிறது. இந்த வண்டிகளில் பூட்டப்படும் காளைகள் ஒரு ஜோடி சுமார் ரூ 75 ஆயிரம் முதல் 1.5 இலட்சம் வரை ஆகிறது. எனவே ஒரு வண்டி-மாடு ரூ 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை ஆகிறது. மாடுகள் தீவனம் மற்றும் பராமரிப்பு, மருத்துவ செலவுகள் என தினசரி ரூ 250 செலவாகிறது. சொந்த தேவைகளுக்காக இப்பகுதி காட்டாறுகளில் இருந்து மணல் அள்ளப்பட்டு, ஒரு வண்டி ரூ 500 முதல் 800 வரை விற்கப்படுகிறது. கால்நடைகள் மற்றும் வாகன பராமரிப்பு போக வண்டி உரிமையாளருக்கு ரூ 300 வருமானம் கிடைக்கிறது. இதிலும் தொடர்ச்சியாக தினசரி வேலை கிடைப்பதில்லை. மணல் கடத்தல் என வருவாய்துறை அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்துவதால், தொடர்ந்து வேலை கிடைப்பதும் இல்லை.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல தரப்பு புகாரின் பேரில் தாலுகா வருவாய்துறையினர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து, அடிக்கடி சோதனை நடத்தி மணல் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்கின்றனர். இவ்வாறு வண்டிகளை பறிமுதல் செய்யும்போது, வழக்குப்பதிவு செய்து விட்டு, வண்டிகளை வைத்துக்கொண்டு மாடுகளை மட்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வண்டிகள் காவல்நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் என 20 க்கும் மேற்பட்ட சுமார் ரூ 15 இலட்சம் மதிப்புடைய டயர் வண்டிகள் மழையிலும், வெயிலிலும் கிடந்து வீணாகி வருகிறது. தொழில் நடத்த முடியாமல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாடுகளை பராமரிக்கவும் முடியாமல், தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு காணவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கூறுகையில், " லாரிகள், டிப்பர்கள், டிராக்டர்கள், டெம்போக்கள் மூலமாக மணல் கடத்துபவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளாகவும், உள்ளூரில் செல்வாக்கு பெற்ற நபர்களாகவும் உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளால் இவர்களை ஏதும் செய்யமுடிவதில்லை. உறுதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இல்லையெனில் பணி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதுபோன்ற மணல் கொள்ளைகளை தடுக்க முடியவில்லை. மணல் கொள்ளைகளால் குடிநீர் ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படுகிறது.
ஆனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரும்பாலும் உள்ளூர் தேவைகளுக்கு, குவாரி உள்ள இடங்களில் மணல் அள்ளுகின்றனர். இவர்களால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மணல் வண்டி தொழிலாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து மணல் எடுக்க டோக்கன் வழங்க வேண்டும்.
மணல் கொள்ளை, மணல் மோசடி கூடாது. விவசாயம் பாதிக்கும் வகையிலோ, பள்ளம் தோண்டி ஆற்றின் போக்கை மாற்றும் விதமாக மணல் அள்ளாமல், சொந்த தேவைகளுக்கு வரைமுறைக்குட்பட்டு தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கென வரைமுறைகளை உருவாக்கி, மணல் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதனை அரசு கண்காணிக்க வேண்டும். லாரிகளில் வெட்டி அள்ளப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு மணல்
கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்டு வீணாகி வரும் மணல் மாட்டு வண்டிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உரிய வழிவகை காணப்பட வேண்டும். மணல் கொள்ளை என்பது தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரைமுறையோடு தொழிலாளர்கள் மணல் எடுக்க குவாரி அமைத்து டோக்கன் வழங்க வேண்டும்" என்றார்.
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய தீர்வு கண்டு தங்கள் வாழ்வாதாரத்தை காத்திடவேண்டும் என்பதே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கையாகும் ....!!!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.