தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில்; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்டப் பிரிவின் சார்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் (இருபாலர்) இன்று (22.03.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.
இப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசுத்துறை அலுவலகங் களிலிருந்து தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் 90 பேரும். பெண்கள் பிரிவில் 40 பேரும். இறகுப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 46 பேரும் பெண்கள் பிரிவில் 20 பேரும். கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர் பெண்கள் பிரிவில் 2 அணியினர், கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர், டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10 பேரும். பெண்கள் பிரிவில் 10 பேரும், கபாடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 அணியினர் பெண்கள் பிரிவில் 4 அணியினர், வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர் பெண்கள் பிரிவில் 2 அணியினர், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10 பேரும். பெண்கள் பிரிவில் 10 பேரும் ஆக மொத்தம் 510 பேர் இப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயம், வாலிபால் ஆகிய விளையாட்டுப்போட்டிகளை துவக்கிவைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், வாலிபால் போட்டிகளிலும் கலந்துகொண்டார்.
பின்னர் 100 மீட்டர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மந்திராசலம், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பயிற்சி துணை ஆட்சியர் ஸ்ரீதேவி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பாபு மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக மாவட்ட வளைகோல்பந்து பயிற்றுநர் அன்பழகன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசுத்துறை அலுவலகங் களிலிருந்து தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் 90 பேரும். பெண்கள் பிரிவில் 40 பேரும். இறகுப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 46 பேரும் பெண்கள் பிரிவில் 20 பேரும். கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர் பெண்கள் பிரிவில் 2 அணியினர், கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர், டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10 பேரும். பெண்கள் பிரிவில் 10 பேரும், கபாடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 அணியினர் பெண்கள் பிரிவில் 4 அணியினர், வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணியினர் பெண்கள் பிரிவில் 2 அணியினர், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10 பேரும். பெண்கள் பிரிவில் 10 பேரும் ஆக மொத்தம் 510 பேர் இப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயம், வாலிபால் ஆகிய விளையாட்டுப்போட்டிகளை துவக்கிவைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், வாலிபால் போட்டிகளிலும் கலந்துகொண்டார்.
பின்னர் 100 மீட்டர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மந்திராசலம், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பயிற்சி துணை ஆட்சியர் ஸ்ரீதேவி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பாபு மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக மாவட்ட வளைகோல்பந்து பயிற்றுநர் அன்பழகன் நன்றியுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.