.

Pages

Monday, March 19, 2018

சவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் விரைவில் துவக்கம்!

அதிரை நியூஸ்: மார்ச் 19
சவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்த வருடத்திற்குள் சேவையை துவக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பரிசோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து சவுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவக்கப்பட்ட திட்டமான ஹரமைன் அதிவேக ரயில் திட்டம் பல்வேறு காலதாமத்திற்குப் பின் விரைவில் பயணிகள் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 வருடத்திற்குள் ஓடத்துவங்கவுள்ள ஹரமைன் எக்ஸ்பிரஸ் சுமார் 16 பில்லியன் (60 பில்லியன் ரியால்) செலவில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

துவங்கும் தேதி குறிப்பிடப்படாத இந்த ஹரமைன் அதிவேக எக்ஸ்பிரஸ் ஒடத்துவங்கினால் மக்கா மதினா இடையில் தற்போது சாலை மார்க்கத்தில் 6 மணிநேரம் எடுக்கும் பயணம் 2 மணிநேரத்திற்குள்ளாக சுருங்கும். ஹஜ், உம்ரா பயணிகள் உட்பட வருடத்திற்கு சுமார் 60 மில்லியன் பயணிகளை சுமந்து செல்லும் இதனால் சாலை மார்க்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் மிகப்பெருமளவில் குறையும்.

ஜப்பானில் 'ஷின்கான்சன்' அல்லது புல்லட் டிரெயின் என அழைக்கப்படுகின்ற இந்த ரயில் ஜப்பானிலேயே அதிகப்பட்சம் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் சவுதிக்கு அதிகப்பட்சம் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. (Japan's "bullet train", also known as Shinkansen, has a maximum operating speed of 320kph)

ஹரமைன் அதிவேக ரயில் - சில புள்ளி விபரங்கள்:
1. வருடத்திற்கு 60 மில்லியன் பயணிகள் பயணிப்பர்.
2. 453 கி.மீ தூர இரட்டை வழி ரயல் பாதை.
3. 5 ரயில் நிலையங்கள் மட்டுமே. (மக்கா, மதினா, ஜித்தா, கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் - ஜித்தா மற்றும் கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி – ராபிஹ்)
4. இரு வழியிலும் தினசரி 35 ரயில் சேவைகள்.
5. ஒரு ரயிலுக்கு சுமார் 417 இருக்கை வசதிகள்.
6. மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும்.
7. 2020 ஆண்டிற்குள் சுமார் 15 மில்லியன் உம்ரா பயணிகள் பயன்படுத்துவர் என்கிற எதிர்பார்ப்பு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.