பேராவூரணி மார்ச்.27
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, குடியிருப்போர் பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நகரச்செயலாளர் எம்.சித்திரவேலு தலைமை வகித்தார். எஸ்.வி.ஸ்டாலின் பிரபு, கே.சந்தானம் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.காசிநாதன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினர். ஒன்றியச்செயலாளர் டி.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார்.
நிர்வாகிகள் வி.ராசமாணிக்கம், டி.ரவி, வை.கருப்பையன், வி.கோபால், கே.சோமசுந்தரம், எஸ்.கே.எம்.காசியார், கே.எஸ்.முருகேசன், ஏ.மரியசெல்வம், ஏ.சையது முகமது கனி, பி.ஏ.கருப்பையா, வி.சிவகாமி மற்றும் நாட்டாணிக்கோட்டை கிராம தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் தஞ்சை மன்னர்களால் தானமாக அளிக்கப்பட்ட, சௌரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதியர் மற்றும் அவரது மகன்களான சீனிவாசன், ராமானுஜம் ஆகியோருக்கு சொந்தமான 70 ஏக்கர் இடங்களில், கிரயம் பெற்று, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து அனுபவம் செய்து வரும் ஏழைமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், இது சம்பந்தமாக போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட நிறைவில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் பேசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, குடியிருப்போர் பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நகரச்செயலாளர் எம்.சித்திரவேலு தலைமை வகித்தார். எஸ்.வி.ஸ்டாலின் பிரபு, கே.சந்தானம் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.காசிநாதன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினர். ஒன்றியச்செயலாளர் டி.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார்.
நிர்வாகிகள் வி.ராசமாணிக்கம், டி.ரவி, வை.கருப்பையன், வி.கோபால், கே.சோமசுந்தரம், எஸ்.கே.எம்.காசியார், கே.எஸ்.முருகேசன், ஏ.மரியசெல்வம், ஏ.சையது முகமது கனி, பி.ஏ.கருப்பையா, வி.சிவகாமி மற்றும் நாட்டாணிக்கோட்டை கிராம தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் தஞ்சை மன்னர்களால் தானமாக அளிக்கப்பட்ட, சௌரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதியர் மற்றும் அவரது மகன்களான சீனிவாசன், ராமானுஜம் ஆகியோருக்கு சொந்தமான 70 ஏக்கர் இடங்களில், கிரயம் பெற்று, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து அனுபவம் செய்து வரும் ஏழைமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், இது சம்பந்தமாக போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட நிறைவில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் பேசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.