தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களை சேர்ந்த
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (22.03.2018) தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாமில் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
மழை வெள்ளக் காலங்களில் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறுதல், கட்டுப்பாட்டு அறை அமைத்து தகவல்களை பெறுதல், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு பாதுகாப்பான இடங்களை கண்டறிதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், முதலுதவி செய்தல், கால்நடைகளை தங்க வைத்து தீவனம் அளித்தல் ஆகியவை குறித்தும், மழை வெள்ள பாதிப்புக்கு பின்னர் தனித்திருக்கும் மக்களை கண்டறிதல், சாலைகள் மற்றும் மின் இணைப்பினை சீர்படுத்துதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல், இழப்புகள் குறித்து கணக்கிடுதல் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நிகழ்வுகள் குறித்து விரிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இப்பயிற்சி முகாமில் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், நாகப்பட்டிணம் சார் ஆட்சியர் கார்த்திகேயன், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (22.03.2018) தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாமில் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
மழை வெள்ளக் காலங்களில் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறுதல், கட்டுப்பாட்டு அறை அமைத்து தகவல்களை பெறுதல், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு பாதுகாப்பான இடங்களை கண்டறிதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், முதலுதவி செய்தல், கால்நடைகளை தங்க வைத்து தீவனம் அளித்தல் ஆகியவை குறித்தும், மழை வெள்ள பாதிப்புக்கு பின்னர் தனித்திருக்கும் மக்களை கண்டறிதல், சாலைகள் மற்றும் மின் இணைப்பினை சீர்படுத்துதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல், இழப்புகள் குறித்து கணக்கிடுதல் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நிகழ்வுகள் குறித்து விரிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இப்பயிற்சி முகாமில் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், நாகப்பட்டிணம் சார் ஆட்சியர் கார்த்திகேயன், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.