.

Pages

Saturday, March 24, 2018

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நவீன கருவிகள் ~ எம்எல்ஏ சி.வி சேகர் திறந்து வைத்தார்!

அதிராம்பட்டினம், மார்ச் 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொதுநிதி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, கணினி மயமக்காக்கப்பட்ட எக்ஸ்ரே கருவி, இரத்த சேமிப்பு மையம், இரத்த அணுக்கள் பரிசோதனை கருவி, உயர் மின்விளக்கு கோபுரம் (ஐமாஸ் விளக்கு), குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ நோயாளிகளின் பயன்பாட்டிற்கு இன்று சனிக்கிழமை காலை திறந்து வைத்தார். பின்னர், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பெற்றுக்கொண்ட 10 தாய்மார்களுக்கு தமிழக அரசின் ‘அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்' மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார்.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் எஸ்.மலர்விழி (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.

விழாவில், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்ரமணியன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் மலைஅய்யன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கெளசல்யா, டாக்டர் ஏ.சீனிவாசன், டாக்டர் எஸ்.கார்த்திகேயன், டாக்டர் டி. சுதாகர், டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன், டாக்டர் எச். இர்ஷத் நஸ்ரின், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் ஹாஜா பகுரூதீன், முகமது முகைதீன், யஹ்யாகான், லியாகத் அலி, துரை.பாஞ்சாலன், சங்கர், அசோக், துரை. முருகானந்தம், அபுதாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.