.

Pages

Friday, March 16, 2018

ஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிடையாது !

அதிரை நியூஸ்: மார்ச் 16
அமீரகம், ஷார்ஜாவின் பிரதான பகுதிகளில் மார்ச் 30 முதல் விடுமுறை நாட்களில் இலவச பார்க்கிங் கிடையாது எனவும், பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகள் எனப்படும் அரபு நாடுகளில் ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வந்தனர், வருகின்றனர், வருவார்களா? என்பது கேள்விக்குறியே! இன்றைய நிலையில் ஒரு சில அரபு நாடுகள் வெளிநாட்டினரை பல்வேறு காரணங்களின் கீழ் வெளியேற்றி வருகையில் வேறு சில நாடுகள் "ஏய் இன்னுமா நீ போகல" என்பதை போன்று நடந்து கொள்ளும்.  யார் யார் எப்படி என்ற முடிவு open to all.

அமீரக எமிரேட்டுகளில் பார்க்கிங் கட்டணங்கள் பலவாறாகவும், நேர வித்தியாசங்களுக்கு உட்பட்டும் வசூலிக்கப்படுகின்றன ஆனால் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் சொல்லிவைத்தார்போல் அனைத்து எமிரேட்டுகளிம் பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுதில்லை.

இந்த பொது நடைமுறையை முதன்முறையாக உடைத்துள்ளது ஷார்ஜா எமிரேட். எதிர்வரும் மார்ச் 30 வெள்ளிக்கிழமை முதல் ஷார்ஜாவின் கீழ்காணும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் என வாரத்தின் அனைத்து நாட்களும் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என ஷார்ஜா முனிசிபாலிட்டி உத்தரவிட்டுள்ளது.

அல் மஜஸ் (Al Majaz), அல் சுவாஹைன் (Al Shuwahain), பறவைகள் மார்க்கெட் (Birds Market), பேங்க் ஸ்ட்ரீட் அருகே (Near Bank Street) ஆகிய பகுதிகளே தற்போது புதிய பார்க்கிங் கட்டண சட்டத்திற்குள் வந்துள்ளது.

இந்த பகுதியில் வாழும் மக்களை காண்பதற்காக விடுமுறை நாட்களில் அதிகமான விருந்தினர்கள் காருடன் வந்துவிடுவதால் அங்கேயே தங்கி வாழும் மக்களுக்கு கார் பார்க்கிங் கிடைப்பதில்லை எழுந்த புகார்களை அடுத்து இந்த முடிவாம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.