.

Pages

Friday, March 16, 2018

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி நியமன ஆணை!

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும்  இணைந்து நடத்திய  மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.03.2018  அன்று காலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் 15 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. 122 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதில் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பணி நியமன ஆணைகள்  உடன் வழங்கப்பட்டது. மேலும் 35  மாற்றுத்திறனாளிகள் இரண்டாம் கட்ட தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 11 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டன.

தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு 8 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TAMIL NADU SKILL DEVELOPMENT CORPORATION) மூலமாக வழங்கப்படும் திறன்மேம்பாட்டு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு  3 மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான  விண்ணப்பங்கள்  20 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 24.03.2018 அன்று அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கும்பகோணத்தில்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் விவரம் நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக  துணை இயக்குநர் கோ.சம்பத், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், கா.பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், அ.கலைச்செல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.