தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால விடுமுறையினை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்புகள் (12 நாட்கள்) 6 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக 01.04.2018 முதல் 14.04.2018 முடியவும், இரண்டாம் கட்டமாக 15.04.2018 முதல் 28.04.2018 முடியவும், மூன்றாம்கட்டமாக 29.04.2018 முதல் 13.05.2018 முடியவும், நான்காம் கட்டமாக 15.05.2018 முதல் 27.05.2018 முடியவும், ஐந்தாம் கட்டமாக 29.05.2018 முதல் 10.06.2018 முடியவும், இறுதியாக 12.06.2018 முதல் 24.06.2018 வரை நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இருபாலருக்கும் ஏப்ரல் 1ந்தேதி முதல் நடத்தப்படவுள்ளது.
9-வயதிற்கு மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோர் நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்பில் சேர்ந்திடலாம். தொடர்ந்து 12 நாட்கள் நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட நீச்சல் பயிற்றுநரைக்கொண்டு சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது.
நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி கட்டணம் ரூ.1500/-ஆகும். பயிற்சி கட்டணத்தினை நீச்சல் குள அலுவலகத்தில் உடன் செலுத்தி இரசீதினை பெற்றுக்கொள்ளலாம். நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்பு முடியும் நாளன்று பயிற்சி மேற்கொள்பவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்புக்களின் போது சம்பந்தப்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பெற்றோர்கள் நீச்சல் குள வளாகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மாவட்டத்தில் மிக குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்பு குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்.04362-235633 மாவட்ட விளையாட்டு அலுவலரின் கைபேசி எண்.7401703496 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு நீச்சல் பயிற்சி வகுப்பு குறித்த விபரங்களை பெற்றுகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ, மாணவியர்கள் நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால விடுமுறையினை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்புகள் (12 நாட்கள்) 6 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக 01.04.2018 முதல் 14.04.2018 முடியவும், இரண்டாம் கட்டமாக 15.04.2018 முதல் 28.04.2018 முடியவும், மூன்றாம்கட்டமாக 29.04.2018 முதல் 13.05.2018 முடியவும், நான்காம் கட்டமாக 15.05.2018 முதல் 27.05.2018 முடியவும், ஐந்தாம் கட்டமாக 29.05.2018 முதல் 10.06.2018 முடியவும், இறுதியாக 12.06.2018 முதல் 24.06.2018 வரை நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இருபாலருக்கும் ஏப்ரல் 1ந்தேதி முதல் நடத்தப்படவுள்ளது.
9-வயதிற்கு மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோர் நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்பில் சேர்ந்திடலாம். தொடர்ந்து 12 நாட்கள் நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட நீச்சல் பயிற்றுநரைக்கொண்டு சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது.
நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி கட்டணம் ரூ.1500/-ஆகும். பயிற்சி கட்டணத்தினை நீச்சல் குள அலுவலகத்தில் உடன் செலுத்தி இரசீதினை பெற்றுக்கொள்ளலாம். நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்பு முடியும் நாளன்று பயிற்சி மேற்கொள்பவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்புக்களின் போது சம்பந்தப்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பெற்றோர்கள் நீச்சல் குள வளாகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மாவட்டத்தில் மிக குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்பு குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்.04362-235633 மாவட்ட விளையாட்டு அலுவலரின் கைபேசி எண்.7401703496 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு நீச்சல் பயிற்சி வகுப்பு குறித்த விபரங்களை பெற்றுகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ, மாணவியர்கள் நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.