அதிரை நியூஸ்: மார்ச் 26
துபையில் டேக்ஸி கட்டணங்களை ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் துபை என்ற எதிர்கால திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன முயற்சிகள் பல்வேறு துறைகளிலும் நாளாந்தம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. துபை டேக்ஸி கட்டணங்களை பணமாகவோ, கிரடிட் கார்டுகள் வழியாகவே செலுத்தும் நடைமுறை ஏற்கனவே இயங்கும் நிலையில் தற்போது கூடுதலாக ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் கட்டணங்களை செலுத்தலாம் என துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.
நமது நாட்டில் செயல்படும் பேடிஎம் (PayTm) போன்றதே இதுவும். துபையில் இயங்கும் சுமார் 8,000 டேக்ஸிக்களில் சாம்சங் பே (Samsung Pay) அல்லது ஆப்பிள் பே (Apple Pay) போன்ற ஆப்களை (App) பயன்படுத்தி ஸ்மார்ட் போன்கள் வழியாக கட்டணம் செலுத்தலாம் எனவும், எஞ்சிய டேக்ஸிக்களிலும் விரைவில் இது பயன்பாட்டுக்கு வருமெனவும் துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் டேக்ஸி கட்டணங்களை ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் துபை என்ற எதிர்கால திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன முயற்சிகள் பல்வேறு துறைகளிலும் நாளாந்தம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. துபை டேக்ஸி கட்டணங்களை பணமாகவோ, கிரடிட் கார்டுகள் வழியாகவே செலுத்தும் நடைமுறை ஏற்கனவே இயங்கும் நிலையில் தற்போது கூடுதலாக ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் கட்டணங்களை செலுத்தலாம் என துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.
நமது நாட்டில் செயல்படும் பேடிஎம் (PayTm) போன்றதே இதுவும். துபையில் இயங்கும் சுமார் 8,000 டேக்ஸிக்களில் சாம்சங் பே (Samsung Pay) அல்லது ஆப்பிள் பே (Apple Pay) போன்ற ஆப்களை (App) பயன்படுத்தி ஸ்மார்ட் போன்கள் வழியாக கட்டணம் செலுத்தலாம் எனவும், எஞ்சிய டேக்ஸிக்களிலும் விரைவில் இது பயன்பாட்டுக்கு வருமெனவும் துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.