தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் இன்று (16.03.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவ10ர் மாவட்டத்தில் 16.03.2018 முதல் 20.04.2018 வரை 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் 119 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 17031 மாணவர்களும், 16891 மாணவியர்களும் ஆக மொத்தம் 33,922 பள்ளி மாணாக்கர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
தனித்தேர்வர்களுக்கு மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 808 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் மாவட்டத்தில் 34,730 மாணாக்கர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
இத்தேர்வு நடைபெறும் 119 தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 3371 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 161 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு 113 ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 226 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் இணை இயக்குநர் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் அவர்களை கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்க்காவல் படைத் தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இக்கல்வியாண்டில் இடைநிலைப் பொதுத் தேர்வு எழுதம் மாணவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இவ்வாய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி உடன் இருந்தார்.
ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவ10ர் மாவட்டத்தில் 16.03.2018 முதல் 20.04.2018 வரை 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் 119 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 17031 மாணவர்களும், 16891 மாணவியர்களும் ஆக மொத்தம் 33,922 பள்ளி மாணாக்கர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
தனித்தேர்வர்களுக்கு மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 808 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் மாவட்டத்தில் 34,730 மாணாக்கர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
இத்தேர்வு நடைபெறும் 119 தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 3371 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 161 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு 113 ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 226 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் இணை இயக்குநர் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் அவர்களை கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்க்காவல் படைத் தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இக்கல்வியாண்டில் இடைநிலைப் பொதுத் தேர்வு எழுதம் மாணவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இவ்வாய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி உடன் இருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.