இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பட்டுக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வாலிபர் சங்க ஒன்றியத்தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருளரசன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் நியூட்டன் ரத்தம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
ஒன்றியச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, ஒரத்தநாடு ஏசுராஜா, தமுஎகச கிளை தலைவர், க.கிருஷ்ணமூர்த்தி, தமிழவன் தி.தனபால், சிஐடியூ கந்தசாமி ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் கோ.ஆறுமுகம், சுரேஷ், விவேக், அஜித் மற்றும் இரத்த வங்கி பொறுப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 26 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு, அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
நண்பர்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்து கிரேன்
ReplyDelete