.

Pages

Sunday, March 25, 2018

பட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்: 26 யூனிட் தானமாக பெறப்பட்டது.

பட்டுக்கோட்டை, மார்ச்.25
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பட்டுக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு வாலிபர் சங்க ஒன்றியத்தலைவர் சுந்தரபாண்டியன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருளரசன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் நியூட்டன் ரத்தம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

ஒன்றியச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, ஒரத்தநாடு ஏசுராஜா, தமுஎகச கிளை தலைவர்,  க.கிருஷ்ணமூர்த்தி, தமிழவன் தி.தனபால், சிஐடியூ கந்தசாமி ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் கோ.ஆறுமுகம், சுரேஷ், விவேக், அஜித் மற்றும் இரத்த வங்கி பொறுப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 26 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு, அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

1 comment:

  1. நண்பர்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்து கிரேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.