.

Pages

Monday, March 19, 2018

தஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையான சான்றிதழ்கள் இணைய தளம் மூலம் வழங்க நடவடிக்கை!

கோப்புப் படம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் வழியாக 15 வகையான சான்றிதழ்கள் இணைய தளம் மூலம் வழங்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதிச் சான்றிதழ்இ வருமானச் சான்றிதழ்இ இருப்பிடச் சான்றிதழ்இ முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், மேலும், கீழ்க்கண்ட 15 வகை சான்றிதழ்களை இணையதள மின் சேவை மூலம் வழங்கிடும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 01-03-2018 அன்று துவக்கி வைத்தார்.

விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கானச்  சான்றிதழ், ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம் (Pawn Brokers License), வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம் (Money Lenders License), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ். மேற்படி 15 சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுசேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கும் போதுஇ விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.

இவ்விவரம், அவர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய பொதுமக்கள் 155250 என்ற எண்ணிற்கு தங்களது விண்ணப்ப எண்ணை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பியோ அல்லது  இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை  உள்ளீடு  செய்தோ அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும் விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி  அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் விண்ணப்பதாரர் வீட்டில் இருந்தவாறே இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகாமையிலுள்ள அரசு பொது சேவை மையம் மூலமாக சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு  பொது இ-சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மகளிர் திட்டம், அரசு கேபிள் டி.வி மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் ஆகியவற்றின் மூலம் இயங்கி வருகின்றன.

பொதுமக்கள்  தங்களது குடியிருப்புக்கு அருகில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களிலேயே விண்ணப்பித்து பயன்பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.