.

Pages

Thursday, March 29, 2018

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து CFI ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 29
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹவாஜா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ரியாஸ் அகமது கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
'தமிழக விளை நிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள் விரும்பாத மீத்தேன், பாறை எரிவாயு, கெயில், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை சுடுகாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்றார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் நிஜாமுதீன் கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
'நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்துவதற்கு அவசரம் கட்டிய மத்திய அரசு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காட்டவில்லை' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். முடிவில், அவ்வமைப்பின், மாவட்ட பொருளாளர் ரஜாக் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.