.

Pages

Tuesday, March 13, 2018

சவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஏப்ரலில் நிறைவு!

அதிரை நியூஸ்: மார்ச் 13
சவுதியில் ஜம்ஜம் கிணறு புதுப்பித்தல், சீரமைத்தல், சுத்திகரித்தல் மற்றும் புதிய நீர் விநியோக அலகுகள் அமைத்தல் ஆகிய பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வந்தன. இந்த பணிகளின் திட்டகாலமாக 7 மாதங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத மத்தியில் நிறைவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் துவங்கிய பணிகள் 24 மணிநேரமும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுமார் 90 சதவிகிதம் நிறைவுற்றுள்ளன. இந்தப் பணிகளில் 96 சதவிகித பொறியாளர்கள் சவுதியை சேர்ந்தவர்களே பணியாற்றினர். புனித ஹரம் ஷரீப் முழுவதும் அமைக்கப்பட்ட 5 புதிய தண்ணீர் போக்குவரத்திற்கான பாதை அமைப்பு பணிகளில் சவுதியிலுள்ள 16 பல்கலைகழகங்களிலிருந்து வந்திருந்த 693 பயிற்சி மாணவர்களும் கல்வித்திட்டத்தின் கீழ் நேரடி களப்பயிற்சி பெற்றனர்.

2 கட்டங்களாக நடைபெற்ற இந்தப்பணிகளில் முதற்கட்டப்பணிகளாக ஹரம் ஷரீஃபின் கிழக்குப் பகுதியில் 5 புதிய நீர் விநியோக போக்குவரத்திற்காக அமைப்புகள் நிறுவப்பட்டன, இதன் மூலம் ஜம்ஜம் கிணற்றிலிருந்து இன்னும் அதிகளவில் தண்ணீரை பம்பிங் செய்து எடுக்கவும், சேமித்து வைக்கவும், தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யவும் இயலும். இந்தத் திட்டம் தவாப் சுற்றும் சுற்றுப்பகுதியின் கீழ் அமைந்துள்ளது.

2வது கட்டப்பணிகள் நீர் சுத்திகரிப்பு சம்பந்தப்பட்டது.ஒரு சிறப்பு வகையான கூழாங்கற்களை பயன்படுத்தி உயர் நீர் ஊடுருவல் தொழிற்நுட்பத்தின் துணை கொண்டு சுத்திகரிப்பதன் மூலம் தண்ணீரில் கலந்துள்ள அன்னியப் பொருட்கள் வடிகட்டப்பட்டு மிக எளிதாக சுத்தமான தண்ணீர் நீரோட்டம் நடைபெறும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.