.

Pages

Tuesday, March 20, 2018

தஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் சிறுவர்கள்,
பள்ளி மாணவ மாணவியர்கள் வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், இடைநிர் கல்வி மற்றும் குழந்தை தொழிலாளர் தொடர்பாக  திருவையாறு-அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் இன்று (20.03.2018) ஆய்வு மேற்கொண்டார். 

திருவையாறு-அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையில்  அணைக்குடி ஊராட்சியில் ராஜா என்பவரது செங்கல் சூளையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் விஜயலெட்சுமி என்ற 16வயதுடைய பெண் செங்கல் சூளையில் வேலை செய்ததில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வின் போது கண்டறிந்து, அப்பெண் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் போதிய வசதியின்மை காரணமாக வேலை செய்வது வருவது தெரிய வந்ததால், 11ம் வகுப்பு படிப்பதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் கீழ் பள்ளியில் சேர்த்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வீரமாங்குடி கிராமத்தில் கருப்பையா என்பவரது செங்கல் சூளையில் ஒரத்தநாடு வட்டம், தெக்கூரை சேர்ந்த கல்யாணசுந்தரம்-சசிகலா ஆகியோர் வேலை செய்து வருவதும், அவர்களது குழந்தைகளான 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் அருண்குமார், 12 வயதுடைய 6ம் வகுப்பு படிக்கும் சாமிநாதன் ஆகியோர் பள்ளிப் படிப்பை தொடராமல் பெற்றோருடன் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அருண்குமார், சாமிநாதன் மேற்கொண்டு படிப்பை தொடங்குவதற்கும், பட்டுக்குடி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டதில் ஜி.ஜென்சிலாமேரி என்ற 9ம் வகுப்பு முடித்த மாணவி மற்றும் ஜி.அந்தோணிராஜ் என்ற 6ம் வகுப்பு முடித்த மாணவனும் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மேற்கொண்டு படிப்பை தொடர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அனைவருக்கு கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உத்தரவிட்டார். 

செங்கல் சூளை உரிமையாளர்களிடம் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் வேலைக்கு அமர்த்தினால், ரூ.50,000 அபராதம் விதிப்பதுடன் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரித்தார். செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளராக பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால் ரூ.2000 அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து, பாபநாசம் வட்டம், தேவங்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.கவியரசு, தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.மின்னல்கொடி, வட்டாட்சியர் லதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.சிரில் ஆண்டனி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் எம்.அறிவின் செல்வம்,  குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், குழு உறுப்பினர் ஏ.கேத்தரின் ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.