.

Pages

Wednesday, January 23, 2019

தஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ.339.32 கோடி நிவாரணம் அளிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ.339.32 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நிவாரண உதவித் தொகையாக ரூ.495.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ.339.32 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வட்டத்தில் 31 கிராமங்களைச் சேர்ந்த 642 தென்னை விவசாயிகளுக்கு ரூ.89.27 இலட்சமும், திருவையாறு வட்டத்தில் 4 கிராமங்களைச் சேர்ந்த 20 தென்னை விவசாயிகளுக்கு ரூ.55 ஆயிரமும், ஒரத்தநாடு வட்டத்தில் 117 கிராமங்களைச் சேர்ந்த 10310 தென்னை விவசாயிகளுக்கு ரூ.72.33 கோடியும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 175 கிராமங்களைச் சேர்ந்த 26,660 தென்னை விவசாயிகளுக்கு ரூ.214.38 கோடியும், பேராவூரணி வட்டத்தில் 90 கிராமங்களைச் சேர்ந்த 9124 தென்னை விவசாயிகளுக்கு ரூ.51.57 கோடியும், பாபநாசம் வட்டத்தில் 50 கிராமங்களைச் சேர்ந்த 319 தென்னை விவசாயிகளுக்கு ரூ.12.73 இலட்சமும், கும்பகோணம் வட்டத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த 45 தென்னை விவசாயிகளுக்கு ரூ.1.59 இலட்சமும் ஆக மொத்தம் இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 478 கிராமங்களைச் சேர்ந்த 47,120 தென்னை விவசாயிகளுக்கு ரூ.339.32 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.