அதிராம்பட்டினம், ஜன.10
குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்கக்கோரிய மனுவுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரி பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அதிரை எஸ்.எச் அஸ்லாம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பது;
குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்பட்ட குளங்களுக்கு ஆற்று நீர் நிரப்பித் தரக்கோரி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக, இராஜமடம் கிளை வாய்க்காலின் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் உள்ள 5 குளங்களுக்கு 20 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தண்ணீர் செல்லும் வாய்க்காலின் குறுக்கே எவ்வித தடுப்பணைகளும் இல்லாமல் வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், இதுவரை தண்ணீர் திறக்கப்பட வில்லை. எனவே, அதிராம்பட்டினம் பகுதியின் கண்மாய்களுக்கு கல்லணை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே சசிதரன், பி.டி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கல்லணை கோட்டம்) ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 23ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்கக்கோரிய மனுவுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரி பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அதிரை எஸ்.எச் அஸ்லாம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பது;
குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்பட்ட குளங்களுக்கு ஆற்று நீர் நிரப்பித் தரக்கோரி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக, இராஜமடம் கிளை வாய்க்காலின் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் உள்ள 5 குளங்களுக்கு 20 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தண்ணீர் செல்லும் வாய்க்காலின் குறுக்கே எவ்வித தடுப்பணைகளும் இல்லாமல் வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், இதுவரை தண்ணீர் திறக்கப்பட வில்லை. எனவே, அதிராம்பட்டினம் பகுதியின் கண்மாய்களுக்கு கல்லணை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே சசிதரன், பி.டி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கல்லணை கோட்டம்) ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 23ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.