.

Pages

Friday, January 25, 2019

அதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ எஸ்.பி விசாரணை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.25
அதிராம்பட்டினத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் என்.சிபஹத்துல்லா (வயது 63). அதே பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடையின் ஷட்டர் திறந்து கிடப்பதைப் பார்த்து அவ்வழியே சென்றவர்கள் சிபஹத்துல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடைக்கு சென்று பார்த்த சிபஹத்துல்லா அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகள், மோதிரம், வளையல் என சுமார் 1 கிலோ எடையுள்ள தங்கம், சுமார் 30 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ.10 ஆயிரம், நகைக்கடையினுள் பொருத்திருந்த கண்காணிப்பு கேமிரா, ஹார்ட் டிஸ்க், இன்வெர்ட்டர் ஆகியன திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராஜராஜன் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இக்சம்பவம், இப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என சிபஹத்துல்லா தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
  
  
  
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.