.

Pages

Thursday, January 10, 2019

அதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ.டி தெரு விளக்கு பொருத்தும் பணி!

அதிராம்பட்டினம், ஜன.10
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ.டி தெருவிளக்கு பொருத்தும் பணி இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ. பிச்சை கூறியது;
அண்மையில் வீசிய கஜா புயலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் மின்கம்பங்கள், மின் விளக்குகள் கடும் சேதமடைந்தன. இதுகுறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றார். பின்னர், இவரது பரிந்துரையை ஏற்று, புதிதாக 1800 எல்.இ.டி விளக்கு அமைப்பதற்காக தமிழக அரசின் சார்பில், ரூ.67.59 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டு வரை உள்ள மின்கம்பங்களில், ஏற்கனவே பொருத்திருந்த பழைய மின் விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டு, அதில் புதிதாக எல்.இ.டி விளக்கு பொருத்தும் பணி நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் ஒருவாரத்தில் நிறைவுபெரும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.