.

Pages

Wednesday, January 30, 2019

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை மாணவர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளர் திருச்சி சுமதி ஸ்ரீ கலந்துகொண்டு ஆண்டுவிழா உரை நிகழ்த்தினார்.

விழாவில், எல்கேஜி முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கல்வி கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன்,  ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய மேலாளர் பிராசாந்த் ஜெயின், ஏ.மலைஅய்யன், பி.சுப்பிரமணியன், ஏ.பிச்சை, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், எஸ்.எம் முகமது முகைதீன், இராம.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக, பள்ளி முதல்வர் என். ரகுபதி அனைவரையும் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு பேசினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.