.

Pages

Sunday, January 13, 2019

பொங்கல் வாழ்த்துப்பா!

ஆணை கட்டி போரடித்த-தன்னிகரில்லா தரணியிலே
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே-தங்கம்
என்று-ஆனந்தக் கூத்தாடி, சுவைக்கு கரும்பு,
பசிக்கு சக்கரைப் பொங்கல், உடுக்க  பட்டாடை
உழவனின் தோழனுக்கு ஒரு விழா
மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஜல்லிக் கட்டு
அகிலமெங்கும் தமிழ் புகழ் பரப்பும் தை திருநாள்.

யார் கண் அல்லது ஊரார் கண் பட்டதா
உனக்குத்தான் தெரியும் ஏகனே,
மண்ணில் தாமிர கலவை கேன்சர்
கொடிய நோய் தாக்கம் தடுக்க
வெகுண்டது தூத்துக்குடி நகரம்
வீர போரில் சூழல் குண்டு பாய்ந்தது
வீர மறவன் மட்டுமல்ல வீரத்தாயும் தானே

நடப்பதிற்கே செருப்பில்லை, எட்டு வழி சாலை ஏனோ
பொன்னைக் காப்பது போல மண்ணைக் காத்த
சேலம் மக்கள் வெகுண்டனர் குரல் எழுப்பி
நீதி அரசர்கள் வநதார்கள் கருணை காட்ட
மரம் நடும் திட்டம் ஒரு பக்கம்
அந்த மலையையே குடையும்
நியூட்ரான், எலெக்ட்ரான் அடுத்தப் பக்கம்
வயலிலும் வாழ்வில்லை, ஒதுங்கும்
மலையிலும் வழியில்லை !

மண்ணையும், மரங்களையும் புரட்டிப் போட்ட
கஜா காட்டேரிப் புயல் மற்றொரு பக்கம்-பலன்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற
தமிழ் மண்ணில்-துணிப் பையுடன்
ரேஷன் கடைகளில் மானியம் வாங்க
காத்திருக்கும் தரணி புகழ் சமுதாயமே!

வருடம் தோறும் நண்பர்களுக்கு பொங்கல்
நல் வாழ்த்துப் பாடும் நான்-இன்று
வாங்கி விட்டாயா அரசு மானியம் என்று
கேட்கும் பரிதாப நிலையா வருவது
அடுத்த வருடமட்டுமல்ல இனி
இந்த நிலை என்றுமே வரக்கூடாது
என்று இறைவனை வேண்டுகிறேன்!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.