.

Pages

Wednesday, January 23, 2019

ஏரிபுறக்கரையில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.23
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் கே.ஜி பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏரிபுறக்கரை மகளிர் சுய உதவிக் குழு சார்பில், பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க கட்டிடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், தஞ்சாவூர் கே.ஜி பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முகராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பயனாளிகளுக்கு இரத்த அழுத்தம், இசிஜி, நீரிழிவு நோய் கண்டறிதல், உடல் எடை பரிசோனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ்.ஏ ராஜ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 36 பேருக்கு கண் புரை நோய் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இம்முகாமில் 326 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமில், ஏரிபுறக்கரை கிராமத் தலைவர் ரவி மற்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.