தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராஜகிரியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் இன்று (30.01.2019) நேரில் பார்வையிட்டனர்.
இன்று (30.01.2019) அதிகாலை சுமார் 12.30மணியளவில் பாபநாசம் வட்டம், இராஜகிரி பெரிய பள்ளி வாசல் தெரு எதிரே உள்ள சந்து கேட் பஜார் தெருவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் உள்ள உணவுக் கடை மற்றும் காய்கறி கடைகள் முழுவதுமாக சேதமடைந்தது. வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், தீ விபத்தில் சேதமடைந்த உணவுக்கடைகளின் உரிமையாளர்கள் முகமது ரபிக், சீராஜுதீன் மற்றும் காய்கறி கடை உரிமையாளர் சாதிக்அலி ஆகியோருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000த்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இந்நிகழ்வின் போது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோபிநாத், பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று (30.01.2019) அதிகாலை சுமார் 12.30மணியளவில் பாபநாசம் வட்டம், இராஜகிரி பெரிய பள்ளி வாசல் தெரு எதிரே உள்ள சந்து கேட் பஜார் தெருவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் உள்ள உணவுக் கடை மற்றும் காய்கறி கடைகள் முழுவதுமாக சேதமடைந்தது. வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், தீ விபத்தில் சேதமடைந்த உணவுக்கடைகளின் உரிமையாளர்கள் முகமது ரபிக், சீராஜுதீன் மற்றும் காய்கறி கடை உரிமையாளர் சாதிக்அலி ஆகியோருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000த்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இந்நிகழ்வின் போது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோபிநாத், பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.