.

Pages

Saturday, January 26, 2019

ரோட்டரி சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம் ~ பரிசுத்தொகுப்பு வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ரோட்டரி சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் அண்ணா தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை விஜயா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கச் செயலாளர் இசட். அகமது மன்சூர் கலந்துகொண்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது, நிர்வாகிகள் டி.முகமது நவாஸ்கான், ஏ.எம் வெங்கடேஷ், ஜி.கஜேந்திரன்,மர்ஜூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதன் பின்னர், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க அலுவலகத்தில், அதிராம்பட்டினம் அரசு பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளி, தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் 30 பேருக்கு ரூ.500 மதிப்பிலான பெட்சீட், விரிப்பு, கைலி, டவல் ஆகியன அடங்கிய பரிசுத்தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.