.

Pages

Monday, January 21, 2019

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 45-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி ஏ. அகமது இப்ராஹீம் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி மாநில அரசு கூடுதல் செயலாளரும், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநருமாகிய எல்.முகமது மன்சூர் கலந்துகொண்டு பேசிய ஆண்டு விழா உரையில்; மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்க ஒழுக்கம் மிகவும் அவசியம். மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டும். என்றார்.

விழாவில் கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசினை பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன், சிறப்பு விருந்தினர் பாண்டிச்சேரி மாநில அரசு கூடுதல் செயலாளரும், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநருமாகிய எல்.முகமது மன்சூர், பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி ஏ. அகமது இப்ராஹீம், பள்ளி இணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம், பள்ளி இயக்குனர் எப். சாகுல் ஹமீது, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, எம்.எப் முகமது சலீம் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் பள்ளி மாணவர்களின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.

தொடக்கத்தில், பள்ளி இணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் பள்ளி  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கிப் பேசினார். மேலும், பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டுப் பேசினார். பள்ளி இயக்குநர் எப். சாகுல் ஹமீது விருத்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி மாணவர் அகமது ஷக்கீல் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி மாணவர் எம்.ஒய் அகமது சமீம் நன்றி கூறினார்.

இந்த விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - பள்ளி அலுவலக பணியாளர்கள் - பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.