.

Pages

Monday, January 21, 2019

காதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக ஆட்சியியல் துறை சார்பாக, கல்லூரியில் வணிக ஆட்சியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரி முன்னாள் மாணவர்களில் தமிழ்நாடு வேளாண் துறை கூடுதல் செயலாளர் எம். கருணாகரன், சென்னை காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி, பத்திரிகையாளர் துரைவேல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஓ.எம் ஹாஜா முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி துணை முதல்வர் எம். நாசர், கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கினைப்பாளர் என். ஜெயவீரன், வணிக ஆட்சியல் துறை இணைப் பேராசிரியர்கள் என்.அப்துல் ஜலீல், ஏ. முகமது நாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியை கமருன் நிஹார் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் எம்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 300 க்கும் மேற்பட்ட வணிக ஆட்சியல் துறை முன்னாள் மாணவ, மாணவிகள், தற்போது செய்து வரும் பணிகள் மற்றும் ஆற்றிய சாதனைகள் குறித்தும், கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்தும், துறை சார்ந்த பேராசிரியர்கள் தங்களுக்கு எந்த வகையில் ஏணியாக விளங்கினார்கள் என்பது குறித்து பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 34 வருடங்களுக்கு முன்பு வணிக ஆட்சியல் துறையில் பயின்றவர்கள் பங்குபெற்று தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.