அதிரை நியூஸ்: ஜன.11
கடந்த நவம்பர் மாதம் இந்திய மத்திய அரசு 14 இஸ்லாமிய நாடுகளில் வேலைவாய்ப்பு ரெஸிடென்ஷியல் விசாக்களில் உள்ளவர்கள், புதிதாக செல்பவர்கள் மட்டும் கட்டாயம் ஆன்லைன் வழியாக ஈ-மைக்ரேட் என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்ய வேண்டும், தவறுவோர் இந்திய விமான நிலையங்களிலிருந்து திருப்பியனுப்பப்படுவர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதேவேளை இதுபோன்ற கெடுபிடி சட்டங்கள் இந்திய வங்கிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் கோடிகோடியாய் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடுபவர்களுக்கோ அல்லது அவர்கள் சென்று பதுங்கும் நாடுகளுக்கு செல்வோர் மீதோ விதிக்கப்படவில்லை என்பதுடன் 'ப்ளு காலர்ஸ்' எனப்படும் படிப்பறிவு குறைந்த சாதாரணத் தொழிலாளர்களே இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதாலும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததையடுத்து இச்சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.
இந்நிலையில் இந்த சட்டத்தை மீண்டும் தூசிதட்டியுள்ள இந்திய அரசு The draft Emigration Bill 2019 என்ற பெயரில் சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்திடும் வகையில் 'வரைவு சட்ட திருத்தத்தை' வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை எதிர்வரும் ஜனவரி 20 க்கு முன் சமூக ஊடகங்கள் வழியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது ஆனால், இம்முறை குறிப்பிட்ட 14 நாடுகள் என்றில்லாமல் பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியர்கள் இந்த வரைவுச் சட்டம் குறித்து படித்து அறிந்து கொள்ள https://mea.gov.in/emigrationbill.htm என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.
உங்களுடைய கருத்தை இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்ப கீழ்க்காணும் முகவரிகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
dsoia1@mea.gov.in
so2oia1@mea.gov.in
பொதுவாக, இதுபோன்ற சட்டங்கள் தவறாகவே பயன்படுத்தப்பட அதிகம் வாய்ப்புள்ளது என பெருவாரியான இந்தியர்கள் கருதுவதால் இது தேவையே இல்லை, தற்போதுள்ள நடைமுறையே போதுமானது என நாமும் கருதுகிறோம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
கடந்த நவம்பர் மாதம் இந்திய மத்திய அரசு 14 இஸ்லாமிய நாடுகளில் வேலைவாய்ப்பு ரெஸிடென்ஷியல் விசாக்களில் உள்ளவர்கள், புதிதாக செல்பவர்கள் மட்டும் கட்டாயம் ஆன்லைன் வழியாக ஈ-மைக்ரேட் என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்ய வேண்டும், தவறுவோர் இந்திய விமான நிலையங்களிலிருந்து திருப்பியனுப்பப்படுவர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதேவேளை இதுபோன்ற கெடுபிடி சட்டங்கள் இந்திய வங்கிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் கோடிகோடியாய் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடுபவர்களுக்கோ அல்லது அவர்கள் சென்று பதுங்கும் நாடுகளுக்கு செல்வோர் மீதோ விதிக்கப்படவில்லை என்பதுடன் 'ப்ளு காலர்ஸ்' எனப்படும் படிப்பறிவு குறைந்த சாதாரணத் தொழிலாளர்களே இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதாலும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததையடுத்து இச்சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.
இந்நிலையில் இந்த சட்டத்தை மீண்டும் தூசிதட்டியுள்ள இந்திய அரசு The draft Emigration Bill 2019 என்ற பெயரில் சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்திடும் வகையில் 'வரைவு சட்ட திருத்தத்தை' வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை எதிர்வரும் ஜனவரி 20 க்கு முன் சமூக ஊடகங்கள் வழியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது ஆனால், இம்முறை குறிப்பிட்ட 14 நாடுகள் என்றில்லாமல் பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியர்கள் இந்த வரைவுச் சட்டம் குறித்து படித்து அறிந்து கொள்ள https://mea.gov.in/emigrationbill.htm என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.
உங்களுடைய கருத்தை இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்ப கீழ்க்காணும் முகவரிகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
dsoia1@mea.gov.in
so2oia1@mea.gov.in
பொதுவாக, இதுபோன்ற சட்டங்கள் தவறாகவே பயன்படுத்தப்பட அதிகம் வாய்ப்புள்ளது என பெருவாரியான இந்தியர்கள் கருதுவதால் இது தேவையே இல்லை, தற்போதுள்ள நடைமுறையே போதுமானது என நாமும் கருதுகிறோம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.