அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அப்பகுதியின் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, இலந்தைப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளிக் கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரைவகைகள் , மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டிற்கு மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார். இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாகக் கிடைக்கும் பொட்டிக்கிழங்கு இன்று புதன்கிழமை காலை விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு (ஒரு குவளை அளவு) பொட்டிக்கிழங்கு ரூ. 20 க்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து மார்க்கெட் பகுதியில் பொட்டிக்கிழங்கு விற்பனை செய்யும் நாடியம்மாள் கூறியது;
'வருடம்தோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாத்திரம் பொட்டிக்கிழங்கு கிடைக்கும். வயல் பகுதிகளில் தானாக வளரக்கூடியது. சுமார் அரை அடி ஆழம் வரை தோண்டி பெரும் சிரமத்திற்கு மத்தியில் கிழங்கை எடுக்கிறோம். கிழங்கை சுற்றியுள்ள வேர்களை முழுவதும் பிடுங்கி எடுத்துவிட்டு நீரில் அவித்து விடுகிறோம். அவித்த கிழங்கு சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். மருத்துவக்குணம் வாய்ந்தது. உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பலதரப்பட்ட நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது' என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அப்பகுதியின் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, இலந்தைப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளிக் கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரைவகைகள் , மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டிற்கு மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார். இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாகக் கிடைக்கும் பொட்டிக்கிழங்கு இன்று புதன்கிழமை காலை விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு (ஒரு குவளை அளவு) பொட்டிக்கிழங்கு ரூ. 20 க்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து மார்க்கெட் பகுதியில் பொட்டிக்கிழங்கு விற்பனை செய்யும் நாடியம்மாள் கூறியது;
'வருடம்தோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாத்திரம் பொட்டிக்கிழங்கு கிடைக்கும். வயல் பகுதிகளில் தானாக வளரக்கூடியது. சுமார் அரை அடி ஆழம் வரை தோண்டி பெரும் சிரமத்திற்கு மத்தியில் கிழங்கை எடுக்கிறோம். கிழங்கை சுற்றியுள்ள வேர்களை முழுவதும் பிடுங்கி எடுத்துவிட்டு நீரில் அவித்து விடுகிறோம். அவித்த கிழங்கு சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். மருத்துவக்குணம் வாய்ந்தது. உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பலதரப்பட்ட நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.