அதிராம்பட்டினம், ஜன.12
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்மையில் வீசிய கஜா புயலின் போது துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகையொட்டி ரூ.500 மதிப்பிலான, அரிசி, கரும்பு, கைலி, போர்வை, பாய், டவல், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு 85 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம். நடராஜன், கே.வைரவன், எம்.முகமது தமீம், டி. முகமது நவாஸ்கான், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்மையில் வீசிய கஜா புயலின் போது துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகையொட்டி ரூ.500 மதிப்பிலான, அரிசி, கரும்பு, கைலி, போர்வை, பாய், டவல், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு 85 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம். நடராஜன், கே.வைரவன், எம்.முகமது தமீம், டி. முகமது நவாஸ்கான், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.